சென்னை : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதல் சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் ஃபரூக் அப்துல்லா பாதுகாப்பாக இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
