காரைக்குடி, மார்ச் 10: காரைக்குடி கழனி வாசல் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து நேற்று காலை சுமார் இரண்டு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை ஒருவர் காரில் ஏற்றிச்சென்றார். இந்த அரிசியை அவர் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது வழியில் உள்ள ஆவுடைப்பொய்கை என்ற இடத்தில் அவரது கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சூர்யா என்பவர் படுகாயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விபத்து குறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
