சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அடுத்த மாமல்லபுரத்தை பொதுமக்கள் இன்று இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.கடற்கரை சின்னம், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றை இலவசமாக பொதுமக்கள் காணலாம். இதே போல் மகளிர் தினத்தை ஒட்டி இன்று செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
