×

பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 6வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி

கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

நட்புக்கும் – கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்!, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Professor's Memorial Day ,Chief Minister ,K. Stalin ,Chennai ,6th Memorial Day ,Anbhaghan ,Secretary General ,Timuk ,Chief Minister of ,Anna Enthrawalaya, Chennai ,Dorundakai ,
× RELATED 5 பஸ்கள் 66 முறை இயக்கப்படுகின்றன ஓவேலி...