×

நாகர்கோவிலில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி மேயர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், மார்ச் 4: நாகர்கோவில் மாநகராட்சி 32வது வார்டு பெஞ்சமின் 5வது குறுக்குத் தெருவில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி, வடக்கு கோணம் முதல் குறுக்குத் தெருவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி, புனித லூர்து அன்னை ஆலயம் அருகில் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மாமன்ற உறுப்பினர் சிஜி பிரவீன், திமுக பகுதி செயலாளர் சேக் மீரான், காங்கிரஸ் ெதன் மண்டல தலைவர் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor ,Nagercoil ,Benjamin 5th Cross Street, Ward 32 ,Nagercoil Corporation ,Holy Lourdes… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்