கோவை: கோவையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பொது வாழ்க்கை வரலாற்றில் இன்று துக்க நாள். உடல்நிலை சரியில்லாமல் போராடிக் கொண்டிருந்த நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணத்துடன் இருந்தவர். வரும் 26, 27 தேதிகளில் பியூஸ் கோயல் வர இருக்கிறார். இடங்கள் குறித்து பேசுவது எல்லாம் அவர்கள் இலாகா. அவர்கள் கூட்டணி குறித்து பேசி சரியாக முடிவு எடுப்பார்கள். காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருந்து வருகின்றார்கள், போகின்றார்கள். எங்களுக்கு அதிகாரம் வேண்டும், தமிழகத்தில் வேண்டாம் என்கிறார்கள்.
ஆனால் நாங்கள் அப்படியல்ல நேர் கோட்டில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம். விஜயை பொறுத்தவரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வரவேண்டும் என முடிவு செய்வார்கள். விஜய்யை திட்டுவது தமிழ்நாட்டு மக்களை திட்டுவதாக அவர் நினைத்துக் கொள்கிறார். அரசியலில் விமர்சனம் எல்லார் மீதும் தான் வைக்கப்படும். நம் மீது விமர்சனம் வைப்பது தமிழ்நாடு மக்களின் மீது வைக்கும் விமர்சனம் என அரசியல்வாதிகள் சொல்லக்கூடாது. சசிகலா இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னும் காலம் இருக்கிறது பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
