டெல்லி: இலவசங்களுக்கு எதிரான வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை கோரி, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொது வழக்கு தாக்கல் செய்தார். பொதுநல மனுக்கள் தேர்தல் காலங்களில் தாக்கல் செய்வது வாடிக்கையாக மாறி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தற்போது மனுவை ஏற்க முடியாது. தேர்தல் முடிந்தபின் வழக்கை விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
