டெல்லி : பண்டிகை காலங்களில் விமான கட்டண உயர்வை தடுப்பது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் விமான கட்டண உயர்வை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசின் பதிலை அடுத்து விமானக் கட்டண உயர்வு பிரச்சனையில் உரிய தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
