- கேரள சுற்றுலா வாரியம்
- பாலக்காடு
- கேரள மார்க்சிஸ்ட்
- சட்டமன்ற உறுப்பினர்
- பி.கே. சசி
- சுற்றுலா வாரியம்
- கேரள சுற்றுலா அமைச்சர்
- சுற்றுலா மற்றும் சுற்றுலா செயலாளர்
- ஒட்டப்பாலம்…
பாலக்காடு: கேரள மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.கே.சசி தனது சுற்றுலா வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவை கேரள சுற்றுலா அமைச்சர், சுற்றுலா இயக்குநர், சுற்றுலா செயலாளரிடம் சமர்ப்பித்ததாக அவர் கூறினார். வரும் தேர்தலில் ஒட்டப்பாலம் தொகுதியில் அவரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் கூட்டணி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
