சென்னை : தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.3,200 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசு நிதி தராத காரணத்தால் கடன் தரும் நிறுவனங்கள் நிதியை நிறுத்தி வைத்துள்ளன என்றார்.
