×

நேற்று எதிர்ப்பு; இன்று ஆதரவு: தவெகவின் டபுள் ஸ்டாண்ட்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்த மருத்துவ முகாமை, தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: நயினார் நாகேந்திரன் விஜய் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். அவரது தரத்தை அவரே குறைத்து கொண்டுள்ளார். மக்கள் இதனை பார்த்துக் கொண்டுள்ளனர். எங்கள் தலைமையை ஏற்று எங்களுடன் வருபவர்களுக்கு, எப்பொழுதும் இடம் அளிக்க தயாராக இருக்கிறோம். யாரும் வரவில்லை என்றாலும், தனித்துப் போட்டியிடும் தகுதியுடன் தான் தவெக உள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களே அவரை ஒதுக்கி விட்டார்கள். 30 சதவீதம் மட்டும் அல்ல, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் தவெக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று முன்தினம் அருண்ராஜ் உட்பட தவெக தலைவர்கள் நயினாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று மென்மையாக போக்கை கடைபிடித்தது விமர்சனத்துக்குள்ளாக்கியது.

Tags : Daveva ,Secretary General ,Arunraj ,Dweka ,Namakkal district, ,Trichenkot ,Nayinar Nagendran ,Vijay ,
× RELATED விசிலை ஊதாமல் ரசிகர்களுக்கு சங்கு ஊதும் விஜய்: தமிமுன் அன்சாரி காட்டம்