×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி விவகாரம்; சைதை துரைசாமிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: ஆதாரம் இல்லாத வாதங்களை வைப்பதா என்று எச்சரிக்கை

 

புதுடெல்லி: கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.கவின் சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னாய் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்த வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” பூத் சிலிப்பில் சம்பந்தப்பட்ட கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? அது சம்பந்தப்பட்ட வேட்பாளரின் சின்னம் தானா. குறிப்பாக இந்த விவகாரத்தில் நீங்கள் சமர்பித்த ஆதாரமும் நீதிமன்றத்தின் பார்வையும் முரணாக இருக்கிறது. ஆதாரம் இருந்தால் தேடி எடுத்து வாருங்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Kolathur Assembly ,Supreme Court ,Saidai Duraisamy ,New Delhi ,AIADMK ,Madras High Court ,M.K. Stalin ,2011 Tamil Nadu Assembly elections ,
× RELATED இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம்...