லிபியா : லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. லிபியாவில் இருந்து படகு புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே எஞ்சின் கோளாறு காரணமாக ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது. 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
