×

டார்க்நெட்,கிரிப்டோவை கண்காணிக்க சிறப்பு பணிக்குழு: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தகவல்

 

புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,எல்லை தாண்டிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், மாநில போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழுக்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலை எளிதாக்கும் டார்க்நெட், கிரிப்டோகரன்சிகளை கண்காணித்தல், போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களைப் பகிர்தல், போதைப்பொருள் நெட்வொர்க்குகளை இடைமறித்தலுக்காக சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, போதைப்பொருள் பறிமுதல் விசாரணைகளை மேற்பார்வையிட ஒன்றிய மற்றும் மாநில மட்டங்களில் ஒரு கூட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Union ,Minister ,of State ,Home Affairs ,New Delhi ,Lok Sabha ,Minister of State for Home Affairs ,Nityanand Rai ,Narcotics Control Bureau ,State Anti-Narcotics Task Forces ,
× RELATED சட்ட விரோதமான பதிவு: நீக்குவதற்கான காலக்கெடு குறைப்பு