டெல்லி : பீகார் மாநில சுயேச்சை எம்.பி பப்பு யாதவ் கைது நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வழக்கில் குரல் எழுப்பி வந்த நிலையில் பப்பு யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசை தட்டிக் கேட்கும் ஒவ்வொரு குரலையும் பயமுறுத்தி அடக்கும் அரசியல் பழிவாங்கல் எனவும் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
