×

புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கே சிலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புதுப்பிக்கப்பட்ட சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை அரசினர் தோட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் வளாகத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தை புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என அதற்கு பெயர் சூட்டியவர் கலைஞர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை ஜி.என்.செட்டி சாலை – திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

அந்த இடத்தில் இருந்த கலைவாணரின் சிலையை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Tags : Chief Minister ,NSK ,Chennai ,M.K. Stalin ,Kalaivanar N.S. Krishnan ,Omandurar complex ,Chennai Government Garden ,Kalaivanar Arangam'.… ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-4...