டெல்லி : ராணுவம் தொடர்பான குறிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வாசித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மைக் துண்டிக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்படாத தகவலை அவையில் பேசக் கூடாது என்று ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுரை வழங்கினார். ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வாசிக்க மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
