- காந்தி
- கிராமம்
- செல்வப்பெருந்தகை
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குடியரசு தினம்
- மகாத்மா காந்தி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதையும், ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பை குறைத்ததையும் கண்டித்து அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
அதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் மீண்டும் பழைய நிலையிலேயே தொடர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
