சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போது துணை பேரவைத் தலைவர் பிச்சாண்டி, பேசுகையில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் . திருவண்ணாமலைக்கு அதிக பக்தர்கள் வருவதால் உடான் திட்டத்தின் கீழ் ஒரு விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நிதி ஆதாரத்தை சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்தால் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் விமான நிலைத்தை பொறுத்த வரையில் புரியாத புதிராக உள்ளது. அவருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் “ என பதிலளித்தார்.
