சென்னை: கறிக்கோழி வளர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரைத்த காரணத்தால் சிறப்பு கவனம் ஈர்ப்பாக ஏற்கப்பட்டு விவாதம் நடைபெறுகிறது. கறிக்கோழி பிரச்னை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தினார். மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்ட அரசுக்கு கொங்கு ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.
