×

துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி, ஜன.21: துவரங்குறிச்சி அருகே பத்தடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி உப்பிலியப்பட்டியைச் சேர்ந்த விஜயகாந்த் என்பவரது வீட்டில் சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் மேற்கூரையில் சிக்கிக்கொண்ட சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பினை போராடி உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பத்திரமாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dhuvarankurichi ,Vijayakanth ,Uppiliyapatti, Dhuvarankurichi, Trichy district ,
× RELATED முன்னாள் படை வீரா், அவர்களை...