×

பஸ்சில் சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியானதால் வாலிபர் தற்கொலை: இளம்பெண் மீது வழக்கு

பதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் தீபக் (41). இவர் ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பஸ்சில் பயணம் செய்தபோது தீபக் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரு இளம்பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ வைரலாக பரவியது. 2 நாட்களுக்குள் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்தனர். தன்னுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் மனமுடைந்த தீபக் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தீபக் மிகவும் ஒழுக்கமானவர் என்றும், வீடியோவை வெளியிட்ட இளம்பெண், தான் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்று திட்டமிட்டு அவரை சிக்க வைத்தார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தங்களுடைய மகனின் சாவுக்கு காரணமான இளம்பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தீபக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசார் நேற்று தீபக்கின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் புகாரை எழுதி வாங்கினர். இதன் பேரில் வீடியோ வெளியிட்ட கோழிக்கோடு வடகரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Pathiruvanandapuram ,Deepak ,Govindapuram, Kozhikode, Kerala ,
× RELATED கரூரில் 41 பேர் பலியான வழக்கு...