×

பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 கோடி விநியோகம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கி சாதனை படைத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பொங்கலை முன்னிட்டு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்தார்.

டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தொடர்புடைய நியாய விலை கடை பணியாளர்களால் வழங்கப்பட்டது. முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலை கடை பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு கைகளில் பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி, ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எண்கள் பெரிது, ஆனால் மக்கள் மகிழ்ச்சி அதைவிட பெரிது.

கரும்பு விவசாயிகளிடமிருந்து தரம் பார்த்து கொள்முதல் செய்வதில் இத்துறை பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்தார்கள். இந்த டிஜிட்டல் மயமான காலகட்டத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை ரொக்கமாக வழங்க கூட்டுறவுத் துறையின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தொய்வில்லாமலும், விரைவாக குறைந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற தேசிய வங்கிகள் செய்ய முடியாததை, கூட்டுறவு வங்கி திறம்பட செய்து சாதித்துள்ளது. இந்தியாவில் எந்த வங்கியும் செய்ய முடியாததை தமிழக கூட்டுறவுத் துறை செய்து முடித்தது.

இத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உரிய பணிகளை இரவு பகலாக சிரமேற்கொண்டு, தங்கு தடைகளின்றி, மக்களின் நன்மை கருதியும், அவர்களது மன மகிழ் சார்ந்து, பொங்கல் தொகுப்பு 2026 அறிவிக்கப்பட்ட ஜனவரி 4 அன்று முதல் பொங்கல் தொகுப்பு துவுக்கப்பட்ட ஜனவரி 8ம் நாளன்றுக்குள் மிக மிக குறுகிய நாட்களுக்குள் பணிகளை செவ்வனவே முடித்தது, மகிழ்ச்சியும் பாராட்டுதலுக்குரியது. மேலும், இந்தியாவிலேயே 2.15 கோடி பயனாளர்களுக்கு ரூ.6453.54 ரொக்கமாக குறுகிய நாட்களுக்குள் பொங்கல் தொகுப்பினை 97 சதவீதம் வழங்கியது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தான். இப்பெருமைக்கும் சாதனைக்கும் அயராது பணிகளை மேற்கொண்ட இத்துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் மகிழ்வதோடு, அவர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுதலைகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pongal ,Chennai ,Cooperatives Minister ,Periyakaruppan ,
× RELATED துபாயில் நடந்த கார் பந்தயத்தில்...