×

ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டையில் அதிநவீன இறைச்சிக் கூடம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

சென்னை: சைதாப்பேட்டையில் ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன இறைச்சிக் கூடம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. சைதாப்பேட்டையில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இறைச்சிக் கூடம் உள்ளது. இந்த இறைச்சி கூடம் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமலும், இட நெருக்கடியிலும் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த இறைச்சி கூடத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி,சைதாப்பேட்டையில் பெயர் பெற்ற ஆட்டு தொட்டி என்னுமிடத்தில் ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன இறைச்சிக் கூடம் கட்டும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அதிநவீன இறைச்சிக் கூடத்தில் பல்வேறு புதிய தொழில் நுட்பத்துடன் சுத்தமான பரிசோதிக்கப்பட்ட இறைச்சி மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 எனும் திட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த அதிநவீன இறைச்சி கூடத்தில் ஒரே சமயத்தில் 700 ஆடுகள் இறைச்சிக்காக தயாராகும் வகையில் 105 கொக்கிகளுடன் 8,600 சதுர அடியில் ஒரு கூடம் அமைகிறது.

ஆட்டு இறைச்சிகளை ஜட்கா மற்றும் ஹலால் முறையில் தயார் செய்யும் வகையில் இக்கூடத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.அதேபோன்று இறைச்சியை குளிரூட்டி பதப்படுத்தும் முறையும், Cold Storage என்கின்ற வகையில் பதப்படுத்தி வைப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் 8 ரீடெயில் கடை கட்டப்பட உள்ளது.இறைச்சைகளை விநியோகம் செய்வதற்கும் அறைகள் கட்டப்பட உள்ளது. இந்த அரசு தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைப்படுத்துவதில் தனி கவனம் செலுத்துகிறது. அந்தவகையில் இங்கே வெளியேறும் அசுத்த நீர் 7 KLD அமைக்கப்பட்டு உள்ளது. Effluent Treatment Plant அதில் சுத்திகரிக்கப்பட உள்ளது.

மேலும் 7000 லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது.இங்கே கிடைக்கப்பெறும் தோல்கள் மற்றும் உள்ள உறுப்புகள் இதர பயன்பாடு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன இறைச்சி கூடத்தில் கால்நடை ஆய்வகம் ஒன்றும் உள்ளது. கால்நடை மருத்துவர்களுக்கு ஒரு அறையும் கட்டப்பட உள்ளது. ஏற்கெனவே இங்கு இயங்கி வந்த இறைச்சி கூடமானது மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்தது.முதல்வர் மு.க ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று தற்சமயம் இந்த இறைச்சி கூடமானது நவீனமும், சுகாதாரத்தோடும், நிலையான நீடித்த சுற்றுச் சூழல் அமைப்பும் ஒருங்கே பெற்று இறைச்சி தயாரிக்கும் முறை மிகவும் நேர்த்தியாகவும், பொது சுகாதாரம் பாதிக்காத வகையில் புதிய விதிமுறைகளை கடைப்பிடித்து ஒரு சிறந்த இறைச்சி கூடமாக அமைய உள்ளது.

Tags : Saidapet ,Chennai ,Chennai Corporation ,
× RELATED மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள்...