சென்னிமலை, ஜன. 7: சென்னிமலை அருகே வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 623 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 46 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 56 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 50 ரூபாய் 10 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 284 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 12 ஆயிரத்து 766 ரூபாய்க்கு விற்பனையானது.
