- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வங்கி
- பெங்களூரு
- பாலமுருகன்
- புவனேஸ்வரி
- தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம்
- ராஜாஜிநகர், பெங்களூரு
பெங்களூரு: தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாலமுருகன்-புவனேஸ்வரி தம்பதி. கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரு ராஜாஜிநகரில் குடியேறினர். பாலமுருகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் அவரது மனைவி புவனேஸ்வரி ஒரு வங்கியில் உதவி மேலாளராக இருந்தார். இருப்பினும், அவருக்கு தனது மனைவி மீது சந்தேகம் இருந்தது, மேலும் அந்த உறவு குறித்து அடிக்கடி வாக்குவாதம் செய்வார்.
இதனால் விரக்தியடைந்த புவனேஸ்வரி விவாகரத்து கேட்டார். முருகன் இதற்கு உடன்படவில்லை. இறுதியாக, புவனேஸ்வரி கடந்த 2024ல் பாலமுருகனை விட்டு பிரிந்து கேபி அக்ரஹாராவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர், அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார், நீதிமன்றம் இது தொடர்பாக முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, முருகன் நீதிமன்றத்தில் ஆஜரானார். புவனேஸ்வரியும் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில், இதனால் ஆத்திரத்தில் இருந்த பாலமுருகன் வேலைக்கு சென்று திரும்பிய புவனேஸ்வரியை நேற்று முன் தினம் மாலை சாலையில் மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, அது கடுமையான சண்டையாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாலமுருகன், துப்பாக்கியை எடுத்து, நடுரோட்டில் தனது மனைவி புவனேஸ்வரியை 5 முறை துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்து படுகாயமடைந்த புவனேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மனைவியைச் சுட்டுக் கொன்ற முருகன் நேரடியாக மாகடி சாலை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
முதற்கட்ட விசாரணையில், கள்ள உறவில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் காரணமாகவும், விவாகரத்து கேட்ட கோபத்திலும் மனைவியை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தை போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் துப்பாக்கியை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பெங்களூரு மேற்கு பிரிவு துணை கமிஷனர் எஸ்.
கிரிஷ் கூறுகையில், ‘கணவன்-மனைவி இடையே இரண்டு ஆண்டுகளாக விரிசல் இருந்தது. மனைவிக்கு ஒழுக்கக்கேடான உறவு இருப்பதாக அவர் சந்தேகித்தார். எனவே, அவர் தனது கணவரை விட்டு ராஜாஜிநகரில் வசித்து வந்தார். கணவர் சோழர்பாளையத்தில் வசித்து வந்தார். மனைவி ஹாவனூர் சர்க்கிள் அருகே உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்தார், மேலும் தனது வீட்டிற்கு 3 கி.மீ நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக் கவனித்த அவர், செவ்வாய்க்கிழமை மாலை காத்திருந்து வேலையில் இருந்து திரும்பிய மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மொத்தம் 5 ரவுண்டுகள் சுட்டுள்ளார். அதில் 2 தலையிலும் 2 குண்டு கையை துளைத்தது. பின்னர் அவர் மாகடி சாலை காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். நாங்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
