மதுரை : நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
