பேரையூர், டிச. 22: பேரையூர் அப்பாஸ் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் டேனியல்ராஜ் (25). இவர் கல்லூரி படிப்பு முடிந்து சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த வேலையில் அவர் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக வேலையின்றி பேரையூரில் தனது அம்மாவுடன் வசித்து வந்தார். பின்னர் மதுரையில் தனது பட்டப்படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி வந்தார்.
இருப்பினும் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த வேதனையில் இருந்த டேனியல்ராஜ், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பேரையூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
