வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற ‘நாஸ்கார்’ (கார் பந்தயம்) சாம்பியனான கிரெக் பிபிள் (55), தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகளான ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற தனி விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக் மற்றும் கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர். ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்த நிலையில் கோளாறு காரணமாக திடீரென விமான நிலையத்திற்குத் திரும்பியது.
அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று ஆண்டெனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
