சென்னை: இலங்கையைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு முதலமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறை இணைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
