சென்னை :தமிழ்நாட்டில் காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக ஒருவர் கூட பணியில் இல்லை என்று ஆர்டர்லிகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு டிஜிபி அறிக்கை தாக்கல் செய்தார். பதவியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என்று டிஜிபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
