- இன்ஸ்பெக்டர்
- உதயகுமார்
- வடலூர்
- வடலூர்
- வடிவேல்
- கிராமம்
- சிதம்பரம் அண்ணாமலை நகர் மாவட்டம்
- கடலுார் மாவட்டம்
- விட்டலிவேல் வடலூர்
வடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் வெற்றிவேல் இவர் வடலூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வெற்றிவேல் வடலூர் சந்தை தோப்பு அருகில் உள்ள தையல் மிஷின் கடைக்கு சென்றார். அப்போது மஞ்சள் பை ஒன்று கீழே கிடந்தது. அதனை எடுத்து சோதனை செய்த போது அதில் ரூ.28,856 பணம் மற்றும் மொய் கவர் இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து வெற்றிவேல் வடலூர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த மஞ்சள் பையை ஒப்படைத்து அதை உரிய நபரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில்
வடலூர் அருகே கே ஆர் மூர்த்தி நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் ராமலிங்கம் 72; என்பவர் கடந்த 5ஆம் தேதி சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகைக்கு அவருடைய மகன் கலையரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவரது உறவினரை காரில் அழைத்துக் கொண்டு செல்ல வடலூர் செல்லியம்மன் கோயில் அருகில் காரில் காத்திருந்தபோது காரில் ஏறி இறங்கும் போது மடியில் வைத்திருந்த மஞ்சள் நிற பை தவறி கீழே விழுந்தது என்பதும் அந்தப் பையில் ரூபாய் 28,856 பணம் மற்றும் மொய்க்கவர் இருந்தது என்று தெரிய வந்தது.
ராமலிங்கத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்து உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னா் முதியவரிடம் பணத்தை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ஒப்படைத்தனர். பணத்தை மீட்டு தந்த காவல் துறைக்கு முதியவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.மேலும் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தை கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல்க்கு பாராட்டு தெரிவித்தனர்.
