சென்னை: தீபாவளியை ஒட்டி இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளில் அக்.16ல் இருந்து அக்.17 நள்ளிரவு வரை 3.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். மேலும் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,975 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
