திண்டுக்கல், அக். 10: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டி (34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னீஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த செல்வபாண்டி அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
