டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கிகளின் கணக்குப் பதிவுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கடன் தள்ளுபடி அல்ல. நிதி நிர்வாக வசதிக்கான நடவடிக்கை. வாராக்கடனை வசூலிக்க வங்கிகள் தொடர்ச்சியாக முயற்சி செய்யும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
