×

5 பேர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்பி பதிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தை காண வந்திருந்த லட்சக்கணக்கானோரில் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

The post 5 பேர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது: கனிமொழி எம்பி பதிவு appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Chennai ,Chennai Marina beach ,DMK ,
× RELATED சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி...