×
Saravana Stores

5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் கொல்லங்குளத்தில் இருந்து மாறாந்தைக்கு பஸ் வசதி

ஆலங்குளம்,அக்.22: ஆலங்குளம் ஒன்றியத்தில் உங்கள் ஊர் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் திட்டம் மூலம் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ நேற்று கரும்புளியூத்து, மாறாந்தை, செட்டிகுறிச்சி, கொல்லங்குளம், உடையாம்புளி, ஓடைமறிச்சான், கண்டபட்டி, மருதம்புத்தூர்ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கரும்புளியூத்து சர்ச் தெரு வடபுறம் சுமார் 50 மீட்டர் சிமெண்ட் சாலை மற்றும் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும், மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்க நான்குவழிச்சாலை ஒட்டியுள்ள ஓடையை சீரமைக்க வேண்டும்.

நாலாங்குறிச்சியில் மருதம்புத்தூர் சாலை வாறுகால், சுடுகாட்டு கொட்டகை, அமைத்து தர வேண்டும், கொல்லங்குளத்தில் இருந்து மாறாந்தை வரை 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்வதால் பஸ் வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உடையாம்புளி கிராமத்தில் வாறுகால், சிமெண்ட் சாலை, இசக்கியம்மன் கோயில் தெருவில் மழைக்காலங்களில் தண்ணீர் இடுப்பளவிற்கு நிற்பதால் ஓடை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்ேபாது மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ கூறுகையில், விரைவில் அனைத்து கோரிக்கைகளும் செய்து தரப்படும்’ என்று உறுதி அளித்தார்.

The post 5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் கொல்லங்குளத்தில் இருந்து மாறாந்தைக்கு பஸ் வசதி appeared first on Dinakaran.

Tags : Kollangulam ,Maranthai ,Alankulam ,Manoj Pandian ,MLA ,Karumbulyuthu ,Chettikurichi ,Odiyambuli ,Odaimarichan ,Kandapatti ,Marudambuthur ,
× RELATED நெல்லை அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது