×

24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: வீரராகவ ராவ் அறிவிப்பு

சென்னை: ஆலந்தூர் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த  உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். …

The post 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: வீரராகவ ராவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Veeraragava Rao ,Chennai ,Alandur Integrated Employment Office Complex ,Weeraragava Rao ,Dinakaran ,
× RELATED வீடு கட்டுவதற்கான நிதி உதவி திட்டம்...