மும்பை: மும்பையில் கொரோனா பரவுவதை பி.சி.சி.ஐ கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் 2021 போட்டிகள் மும்பை நடைபெறும் என பி.சி.சி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் நிலைமை மீறி சென்றால் மும்பையில் நடக்கும் போட்டிகளுக்கு பதிலாக ஹைதராபாத்தில் போட்டிகளை நடத்தவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.