×

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சி, ஜூன் 29: ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த லாரி கவிழ்ந்து ஆட்டோ, டூ வீலர் சேதமானது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். ரங்கத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல வகையான பூக்களை லாரிகள், மினி லாரி மற்றும் லோடு ஆட்டோக்கள் மூலம் விற்பனைக்காக எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களுடன் மினி லாரி ஒன்று வந்தது. இந்த லாரி சென்னை – திருச்சி ட்ரங்க் ரோட்டில் திருவானைக்காவலில் இருந்து ரங்கம் பகுதிக்கு திரும்பும் போது பாரம் தாங்காமல் ஒரு புறமாக தூக்கி கொண்டே சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்ற ஆட்டோ மற்றும் டூ வீலர் மீது கவிழ்ந்தது. இதில் ஆட்டோ மற்றும் ஒரு டூவீலர் முழுவதுமாக சேதமானது.

ஆட்டோவில் வந்த டிரைவர் காந்தி, அருகே நின்ற 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த ரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மினி லாரியை பொக்லைன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

The post ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம் appeared first on Dinakaran.

Tags : Rangam flower market ,Trichy ,rangam ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது