×

₹15 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

 

காரிமங்கலம், செப்.10: காரிமங்கலம் தேங்காய் சந்தை ேநற்று நடந்தது. இதில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்றஅள்ளி, குடிமேனஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்களது தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் தேங்காய்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காயின் அளவை பொறுத்து ₹7 முதல் ₹13வரை பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதில் சுமார் ₹15லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹15 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,market ,Kaveripatnam ,Parur ,Arashampatti ,Tataraalli ,Gudimenaalli ,Chellampatti ,
× RELATED விஸ்வகர்மா ஜெயந்தி விழா