×

வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

ஏழாயிரம்பண்ணை, ஜூன் 12: வெம்பக்கோட்டை அருகே கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 2 டன் அடங்கிய 40 மூட்டை ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த நவனீதன் என்பது தெரியவந்தது. இது குறித்து விருதுநகர் உணவு கடத்தல் பிரிவு தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Vembakkottai ,Dinakaran ,
× RELATED அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு