×

வி.கே.புரத்தில் 7 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது

வி.கே.புரம், செப். 19: வி.கே.புரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைத்திருந்த இருவரை கைதுசெய்த போலீசார், 7 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு விற்கப்படுவதாக அம்பை டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் மற்றும் விகேபுரம் எஸ்ஐ சிவா தலைமையிலான போலீசார் வி.கே.புரம் மற்றும் பாபநாசம் பAகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் வி.கே.புரம் பகுதியில் ஆம்பூர் பெரிய தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (50) என்பவரை சோதனையிட்டதில் அவர் 7 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலையை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலையை இவருக்கு விற்பனை செய்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரையும் கைது செய்தனர்.

The post வி.கே.புரத்தில் 7 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : VK Puram ,Ambai ,DSP ,VKpuram ,Nellai district ,
× RELATED அருப்புக்கோட்டையில் போராட்டத்தில்...