×

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விருதுநகர், செப். 30: விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் அருகே வெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுத்தாய்(33), இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக வீட்டின் முன் பந்தல் மேடை அமைக்க மணலை மட்டப்படுத்தி சரி பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.

அப்போது உறவினரான வேல்சாமி, அவரது மனைவி மாரியம்மாள், மகன் சந்தானம் ஆகியோர் பொன்னுத்தாயை தரக்குறைவாக பேசி காயப்படுத்தி உள்ளனர். படுகாயம் அடைந்த பென்னுத்தாய் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஆமத்தூர் போலீசில் பொன்னுத்தாய் புகாரில் வேல்சாமி, மாரியம்மாள், சந்தானம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!