×

வத்திராயிருப்பு அருகே மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி உயிரிழப்பு

 

வத்திராயிருப்பு, ஜூலை 22: வத்திராயிருப்பு அருகே மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி நெடுங்குளத்தை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் நேற்று அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது மரத்தில் உள்ள தேங்காயை தொரட்டி கம்பு மூலம் இழுக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து குலையுடன் சேர்ந்து விழுந்த கூர்மையான பாலை அவரது கழுத்தில் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து கூமாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வத்திராயிருப்பு அருகே மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vathirairuppu ,Srinivasan ,Nedungulam, Koomapatti ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...