- அரூர்
- அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- Morappur
- கம்பைநல்லூர்
- கோபிநாதம்பட்டி
- கூட்ரோடு
- பாப்பிரெடிபட்டி
- கட்தூர்
அரூர், மே 27: அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 65 விவசாயிகள் 418 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, கோவை பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.13,600 முதல் ரூ.14,609 வரையிலும், குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ.11,600 முதல் 12,910 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 418 மூட்டை மஞ்சள் ரூ.30 லட்சத்துக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.
The post ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.
