×

ரயில்வே ஊழியர் தற்கொலை

 

திருவெறும்பூர், ஜூலை 6: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் அழகேசன் (30). திருமணம் ஆகாத இவர் திருச்சி பொன்மலை ரயில்வே குட்ஷெட் யார்டு பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அழகேசன் அதற்கு உரிய சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அழகேசன் அவரது வீட்டில் உள்அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post ரயில்வே ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,Mayavan ,Anna Bend ,Duvakudi ,Trichy district ,Azhagesan ,Trichy Ponmalai Railway Goodshed Yard ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்