×

மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

 

மேலூர், டிச.11: மழை பெய்து, விவசாயம் செழித்தோங்க வேண்டி, மேலூர் அருகே உள்ள சிவாலயத்தில் சிறப்பு பிராத்தனைகளுடன் தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள  சங்கரலிங்கம்,  சங்கரநாராயண சுவாமி, கோமதியம்மன் கோவிலில் கார்த்திகை மாத சூரிய வார தேய்பிறை பிரதோஷ வழிபாடு, நேற்று நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, பால், பன்னீர், இளநீ்ர, சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும், நந்தியம் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பிரதோஷ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கநாதம் முழங்க, கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பக்தர்கள் சிவ புராணம், கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்களை பாராயணம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜேஷ் அர்ச்சகர் மற்றும் சங்கரநாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post மேலூர் அருகே சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Melur ,
× RELATED மாட்டு வண்டி பந்தயத்தில் அதிர்ச்சி: காளைகள் மிதித்து தொழிலாளி பலி