×

மேலக்கருப்பூர் ஊராட்சியில் புகைப்பட கண்காட்சி

ஜெயங்கொண்டம், ஜூன் 3: அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கருப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் கடந்த நான்கு ஆண்டுகளாக துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் அமைச்சர்கள் ,மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கலான, நான் முதல்வன்,

இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் ,கலைஞர் கனவு இல்லம், விடியல் பயணம், நான் முதல்வன் உங்களைத்தேடி உங்கள் ஊரில், கள ஆய்வில் முதல்வர், வேலை வாய்ப்பு முகாம்கள், கலைஞர் கைவினைஞர் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 ,குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

The post மேலக்கருப்பூர் ஊராட்சியில் புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Melakaruppur Panchayat ,Jayankondam ,Tamil Nadu government ,Ariyalur Panchayat Union ,Ariyalur District News Public Relations Department ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...