×

திருத்துறைப்பூண்டி அருகே கை எட்டும் தூரத்தில் மின் கம்பி பல்பு எரிய விட்டு போராட்டம்

திருத்துறைப் பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த வேளூர் சிவன்கோயில் தெரு அருகில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் கைக்கு எட்டக்கூடிய அளவில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.  ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின் வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த தெருவாசிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பியில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட பல்புகளை எரியவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றிரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Tiruthirapoondi, power grid, struggle
× RELATED திருடு போன டிரான்ஸ்பார்மர்-9 மாதங்களாக மக்கள் அவதி